சொந்த காணி இல்லாத யாழ்.மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 32.5 மில்லியன் ஒதுக்கீடு, 21 மில்லியனை விடுவித்தது அரசு..

ஆசிரியர் - Editor I
சொந்த காணி இல்லாத யாழ்.மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 32.5 மில்லியன் ஒதுக்கீடு, 21 மில்லியனை விடுவித்தது அரசு..

யாழ்.மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்காக காணி கொள்வனவு செய்வதற்காக 21 மில் லியன் ரூபாய் சமூக வலவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் விடுவிக்கப்ப ட்டிருப்பதாக அமைச்சின் செயலாளா் யாழ்.மாவட்ட செயலருக்கு அறிவித்துள்ளாா். 

மாவட்டத்தில் காணியில்லாத மக்களுக்கு காணிகளை கொள்வனவு செய்வதற்காக 32.5 மில்லிய ன் ரூபாய் நிதி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் முதற்கட்டமாக 21 மில் லியன் ரூபாய் நிதியை அமைச்சு விடுவித்திருக்கின்றது. 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களில் காணி இல்லாதவர்களுக்கு காணியைக் கொள்வனவு செய்து வழங்க 32.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டும். 

அதனால் முதல்கட்டமாக 21 மில்லியன் ரூபா நிதி இன்று (மார்ச் 5) யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.மிகுதி ஒதுக்கீடும் விரைவில் விடுக்கப்படும். காணி பெற்றுக் கொடுக்கப்பட்டதும் வீட்டுத் திட்டம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் 

என்று சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு