ஆவா குழு ரவுடிகளின் பயன்பாட்டிலிருந்து வீடு முற்றுகை..! இரு வாள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
ஆவா குழு ரவுடிகளின் பயன்பாட்டிலிருந்து வீடு முற்றுகை..! இரு வாள்கள் மீட்பு..

யாழ்.தாவடி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்டு பொலிஸாா் நடாத்திய சோதனை நடவடிக் கையின்போது இரு வாள்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த பகுதியில் ரவுடிகள் வாள்களுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படை யில் பொலிஸாா் வீடொன்றை இன்று அதிகாலை முற்றுகையிட்டு சோதனை நடாத்தியிருந்தனா். 

இதன்போது வீட்டின் முன் முகப்பு சண் செட் பகுதியில் இருந்து இரண்டு கூரிய வாள்களை மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு