தெல்லிப்பளை விபத்தில் காயமடைந்தவர் மரணம்!

ஆசிரியர் - Admin
தெல்லிப்பளை விபத்தில் காயமடைந்தவர் மரணம்!

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். உரும்பிராய் மேற்கு பகுதியை சேர்ந்த திருமேனி திலீபன் (வயது 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 26ம் திகதி மேற்படி நபர் மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பளை சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது, பிரதேச செயலகத்திற்கு முன்னால் வீதியினை சடுதியாக ஒரு பெண் கடந்துள்ளார். 

இதன் போது வேகத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் குறித்த பெண்ணை மோதி தள்ளியது மோட்டார் சைக்கிள். இதில் குறித்த பெண்ணும், மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

காயமடைந்த பெண் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி குடும்பஸ்தர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு