சுமந்திரனின் முகத்திரையே கிழியும்! - சுரேஷ் பதிலடி
முகத்திரை கிழிக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரன் போன்றவர்களே அன்றி தமக்கு அல்ல என்று, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“எங்களுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றோ சுயலாபங்களுக்காகவோ, நாங்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறவில்லை. தற்பொழுது தேர்தலை மையப்படுத்தி பொய்யான பரப்புரைகளை சுமந்திரன் பரப்பி வருகிறார்.
கடந்த அரசாங்கத்துடன் சுமந்திரன் எவ்வாறு ஒத்து செய்யப்பட்டார், எவ்வளவு தூரம் ரணில் விக்கிரமசிங்கவுடைய அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சித்தாரென்று, அனைவருக்கும் தெரியும். எனவே, யாருடைய முகத்திரையை கிளிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எ என்றும், அவர் கூறினார்.