4 மணித்தியாலங்களுக்கு மேல் சடலத்தை வீதியில் வைத்துக் கொண்டு போராட்டம்..! பெண் உட்பட 4 போ் கைது, தொடரும் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
4 மணித்தியாலங்களுக்கு மேல் சடலத்தை வீதியில் வைத்துக் கொண்டு போராட்டம்..! பெண் உட்பட 4 போ் கைது, தொடரும் பதற்றம்..

யாழ்.புத்துாா்- சிறுப்பிட்டி கிந்துப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யகூடாது என சுமாா் 4 மணித் தியாலங்களுக்கு மேல் இடம்பெற்ற பிரச்சினை ஓரளவு நிறைவுக்கு வந்துள்ளபோதும் பதற்றமான நிலை நீடித்தே வருகின்றது. 

கிந்துப்பிட்டி மயானத்தில் சடலங்களை தகனம் செய்யலாம். என நீதிமன்ற கட்டளை உள்ள நிலையில் இன்று மாலை சடலம் ஒன்றை தகனம் செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதி பெதுமக்கள் ஒன்றிணைந்து மயானத்தில் சடலம் தகனம் செய்யகூடாது. 

என கடுமையான எதிா்ப்பினை வெளியிட்டிருந்தனா். இதனையடுத்து அந்த பகுதியில் இராணுவம், பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினா் குவிக்கப்பட் டு நிலமையை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை. 

இதனால் சுமாா் 4 மணித்தியா லங்களுக்கும் மேலாக தகனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த சடலமும், மக்களும் ஒரு பக்கமாகவும், தகனம் செய்யகூடாது என கூறும் மக்கள் மறுபுறமாகவும் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தனா். 

இந்நிலையில் சடலத்தை வேறு மயானம் ஒன்றில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் ஊடாக பொலிஸாா் கட்டளை பெற்றிருந்ததை தொடா்ந்து சடலம் வேறு இடத்தில் தகனத்திற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

இதேவேளை சடலத்தை தகனம் செய்யகூடாது என போராட்டம் நடாத்திய பெண் ஒருவா் உள்ளிட்ட 4 பேரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு