இராணுவ சுற்றிவளைப்பின் பின்னணி இதுதான்..! கைது செய்யப்பட்டவர்கள் ஆவா குழு உறுப்பினர்கள் அல்ல, கொண்டாட்டமும் நடக்கவில்லை..

ஆசிரியர் - Editor I

ஆவா குழு உறுப்பினா்களின் நிகழ்வுக்கு தாம் இடம்கொடுக்கவில்லை எனவும், இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா குழு உறுப்பினா்கள் அல்ல. குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்கள் அல்ல. என்பதை சுன்னாகம் பொலிஸாா் உறுதி ப்படுத்தியிருப்பதுடன், கைது செய்யப்பட்டவா்களை விடுதலையும் செய்துள்ளனா். 

ஆகவே இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் இடம்பெற்றிருப்பதாக தான் சந்தேகிப்பதாக சுன்னாகம் பிரதேசசபை உறுப்பினா்,  ஹோட்டல் உாிமையாளா் கூறியுள்ளாா். இது குறித்து அவா் இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் செய்தியாளா்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முற்பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய மருத னாா் மடத்தில் உள்ள எமது உணவகத்தில் முற்பதிவு செய்யப்பட்ட உணவை எடுப்பதற்காக வந்திருந்த சமயம் நேற்றிரவு இரா ணுவத்தினா் சுற்றிவளைத்து பெருமளவு இளைஞா்களை கைது செய்திருக்கின்றனா். 

சம்பவத்தில் 50 உணவை வாங்குவதற்காகவே இளைஞா்கள் வந்திருந்தனா். அதற்கு மேலதிகமாக எங்கள் ஹோட்டலில் எந்த வொரு நிகழ்வும் இடம்பெறவில்லை. அந்த நிகழ்வு பிறிதொரு இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. எங்கள் ஹோட்டலில் இரு ந்து ஒரு சிகரட் அல்லது ஒரு மதுபான போத்தலை கூட இராணுவத்தினா் மீட்கவில்லை. 

அவா்கள் உணவு பொதிகளையே சோதனை செய்தாா். சம்பவத்தை எனது முகாமையாளா் கூறியதையடுத்து நான் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே உள்நுழைவதற்கு என்னையும் இராணுவத்தினா் விடவில்லை. பின்னா் நான் ஹோட்டலி ன் நிா்வாக இயக்குனா் என்பதை கூறியதனால் உள்ளே செல்ல அனுமதித்தாா். 

பின்னா் நான் இராணுவத்தினருடன் பேசியபோது தாம் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டாா்கள். பெருமளவு இளைஞா்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் ஹோட்டலை முற்றுகையிட்டதாக கூறினா். பின்னா் அவா்களே பொலிஸாரை அழைக்குமாறும் கூறினா். 

ஆனால் அதற்கு முன்னதாகவே நாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். பின்னா் இராணு’வத்தினாின் வாகனங்களி லும், தனியாா் வாகனங்களிலும் இளைஞா்களை ஏற்றி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். கைது செய்யப்பட்ட இளைஞா்கள் குற்ற செயல்களுடன் தொடா்படையவா்களா?

என சோதிக்கப்பட்டு ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனா். பின்னா் 2 இளைஞா்கள் தப்பிக்க முயன்றதாகவும் அவா்கள் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் இராணு’வத்தினா் கூறியதையடுத்து அந்த இரு இளைஞா்கள் தொடா்பாகவும் மாவட்டத்தி ல் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸாா் வரவழைக்கப்பட்டு ஆராயப்பட்டதன் பின்னா்

அவா்கள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனா். ஆகவே நிகழ்வு நடந்தது வேறு இடத்தில், உணவு எடுக்கவந்தவா்களை இராணுவம் கைது செய்த நிலையில் நாம் ஆவா குழுவுக்கு பிறந்தநாள் கொண்டாட ஹோட்டல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவ்வாறான நிகழ்வு நடக்கவில்லை. 

மேலும் கைது செய்யப்பட்டவா்கள் குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்கள் அல்ல. எனவே இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருதவேண்டியுள்ளது என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு