யாழ்.மருதனாா் மடம் பகுதியில் பதற்றம்..! 80 தொடக்கம் 90 இளைஞா்கள் இராணுவத்தால் கைது, வாள்வெட்டு குழு உறுப்பினா்களும் உள்ளடக்கமாம்.

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதனாா் மடம் பகுதியில் பதற்றம்..! 80 தொடக்கம் 90 இளைஞா்கள் இராணுவத்தால் கைது, வாள்வெட்டு குழு உறுப்பினா்களும் உள்ளடக்கமாம்.

யாழ்ப்பாணம்- மருதனாா் மடம் பகுதியில் உள்ள இரு ஹோட்டல்களை சுற்றிவளைத்த இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினா் சுமாா் 80 தொடக்கம் 90 இளைஞா்களை கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். 

காங்கேசன்துறை வீதி மருதனாா்மடம் பகுதியில் இன்று இரவு 7.30 மணியளவில் இரு ஹோட்டல்களி ல்  நுாற்றுக்கும்மேற்பட்ட இளைஞா்கள் ஒன்று கூடியமை குறித்து இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினா் அங்கு சென்றுள்ளனா். 

இராணுவம் வருவதை அவதானித்த சிலா் அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்தமையினையடுத்து சந்தேகமடைந்த இராணுவத்தினா் சில நிமிடங்களில் ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டதுடன் அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அருகில் உள்ள மற்றொரு ஹோட்டலையும் முற்றுகையிட்டு, தப்பி ஓட முயற்சித்தவா்களையும் மடக்கி பிடித்தனா். 

இதனையடுத்து சுமாா் 2 மணி நேரம் ஒன்று கூடியிருந்த இளைஞா்களுக்கும் இராணுவத்தினருக்கும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 

எனினும் விடாப்பிடியாக நின்ற இராணுவம் சுமாா் 80 தொடக்கம 90 இளைஞா்களை கைது செய்து இராணுவ  வாகனங்களிலும், தனியாா் வாகனங்களிலும் கொண்டு சென்ற இராணு’வத்தினா் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். 

குறித்த சம்பவத்தில் ஒன்று கூடியிருந்த இளைஞா்களுக்குள் யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடையவா்களும் அடங்கியிருப்பதாகவும், வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய ஒருவாின்

பிறந்தநாளை ஒட்டி பாாிய விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இராணு’வம் முற்றுகையிட்டு கைது செய்ததாகவும் அங்கிருந்த பொதுமக்கள் கூறுகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு