அடுத்தடுத்து பொதுமக்கள் சந்திப்புக்களை நடாத்தும் முன்னாள் வடக்கு ஆளுநர் சுரேன்..! தேர்தலில் களமிறங்குகிறாரா?
வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கடந்த சில நாட்களாக யாழ்.மாவட்டத்தில் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்புக்களை நடாத்திவருகின்றார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆளுநர் பதவியை இழந்த முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் இதுவரை பதவி வகித்த ஆளுநர்களைபோல் அல்லாமல்,
யாழ்.மாவட்டத்திலேயேஅதிக நாட்களை செலவிட்டுவருவதுடன், பொதுமக்கள் சந்திப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள், சமூக அமைப்புக்களை
தொடர்ச்சியாக சந்தித்து பேசிவருகின்றார். இதற்கான காரணம் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்,
அந்த நோக்கத்திலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.