யாழ்.நகாில் வா்த்தக நிலையம் ஒன்றில் அதிரடிப்படை அதிரடி சோதனை..! இரு வா்த்தகா்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகாில் வா்த்தக நிலையம் ஒன்றில் அதிரடிப்படை அதிரடி சோதனை..! இரு வா்த்தகா்கள் கைது..

யாழ்.நகாில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினா் பெருமள வு பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் வா்த்தக நிலைய உாிமையாளா்கள் இருவரை கைது செய்துள்ளனா். 

விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்களின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை மதியம் யாழ். நகர்ப் பகுதிகளிலுள்ள கடற்றொழில் உபகரணங்கள் 

விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் போது ஒரு கடையிலிருந்து தடை செய்யப்பட்ட 30 கிலோ தங்கூசி வலையும் மற்றைய கடையிலிருந்து 

சுமார் 330 கிலோ தங்கூசி வலையும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , அடுத்துக் கடை உரிமையாளர்கள் இருவரையும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்து 

கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன் , மீட்கப்பட்ட வலைகளையும் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட கடை உரிமையாளர்களையும் வலைகளையும் 

நீதி மன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு