14 வயது சிறுமியை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகம்..! மாணவின், ஆசிாியா், முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.

ஆசிரியர் - Editor I
14 வயது சிறுமியை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகம்..! மாணவின், ஆசிாியா், முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.

14 வயது சிறுமியை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த 19 வயதான காதலன் மற்றும் 41 வயதான ஆசிாியா், 55 வயதான முதியவா் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் 19, 41, 55 வயதுடையவர்கள் 

என தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சிறுமியின் தந்தை சிறு வயதில் உயிரிழந்த நிலையில் தாயார் வேறு திருமணம் முடித்து  வாழ்ந்து வருவதால் சிறுமி தனது அப்பப்பாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அச்சிறுமியை காதலித்த அப்பகுதியை சேர்ந்த இளைஞரும், மொரவெவ 06ஆம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய முன்னாள் இராணுவ வீரரான டபிள்யூ.எம்.ராஜா திஸாநாயக்கவும் இணைந்து தனிமையில் வீட்டில் இருந்த சிறுமியை 

பயமுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த வயோதிபரை கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு வழங்கிய 

வாக்குமூலத்தில் தான் பாடசாலைக்கு பின்னேர வகுப்பிற்காக சென்றபோது தனது ஆசிரியர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும்  இதனை அடுத்து தனது காதலன் துஷ்பிரயோகம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 

பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு