ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸ் சோதனை!

ஆசிரியர் - Admin
ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸ் சோதனை!

மாதிவெலயில் உள்ள, முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.

தனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியோடு பொலிஸார் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக டுவிட் செய்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர், தான் எந்தவொருக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தான் கைது செய்யப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லாது, சிறைக்கு செல்வேனெனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா, ஹெ​ரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தனது வீட்டில் இருப்பதாகவே சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டு வருவதால், அங்கு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ரஞ்சன் வீட்டிலிருந்து தாஜூதின் கொலை வழக்கு தொடர்பான பைல்கள், மடிக் கணினி, இருவெட்டுக்கள் சிலவற்றையும், பொலிஸார் விசாரணைக்காக கொண்டு செல்ல உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு