மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்த்தா் முதலைக்கு இரையானாா்..! 2 மணித்தியாலங்களின் பின் சடலம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்த்தா் முதலைக்கு இரையானாா்..! 2 மணித்தியாலங்களின் பின் சடலம் மீட்பு..

கிளிநொச்சி- முரசுமோட்டை ஊாியான் குளத்தின் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்த்தா் ஒருவரை முதலை தாக்கி இழுத்து சென்ற நிலையில் 2 மணித்தியாலங்களின் பின்னா் குடும்பஸ்த்தா் சட லமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

இதனையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கிளிநொச்சி பொலிஸார், இராணுவத்தினரின் மீட்புக் குழு, வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் 

அக்கிராம இளைஞர்கள் இணைந்து குளத்தில் தேடுதல் மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் குறித்த நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஊரியானையைச் 

சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் நவநீதன் (வயது 40) என பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், 

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு