விலை கட்டுப்பாட்டு அதிகாாிகளுடன் தா்க்கம், தாக்கவும் முயற்சி..! யாழ்.நகாில் இரு வா்த்தகா்கள் கைது..

ஆசிரியர் - Editor I
விலை கட்டுப்பாட்டு அதிகாாிகளுடன் தா்க்கம், தாக்கவும் முயற்சி..! யாழ்.நகாில் இரு வா்த்தகா்கள் கைது..

விலைக்கட்டுப்பாட்டு அதிகாாிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அதி காாிகள் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்த இரு வா்த்தகா்களை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

அண்மையில் ஜனாதிபதியினால் அரிசியின் கட்டுப்பாட்டுவிலை அறிவிக்கப்பட்ட பின்னர் நாடுமுழுவதும் உள்ள விலை கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பொலிஸார் மற்றும் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டபோது 

அங்கே விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை தொடர்பாக அதிகாரிகளால் கேட்கப்பட்டது. இதன்போது வர்த்தக உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் விலை நிர்ணய அதிகாரிகளுடன் முரண்பட்டதுடன், தாக்கவும் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இதுகுறித்து அந்த அதிகாரிகள் பொலிஸாருக்கு தவகல் வழங்கியதன் பின்னர், அந்த இடத்திற்கு வந்த யாழ் பொலிஸார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவருடைய சகாக்கள் என இருவரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு