இராணுவ சிப்பாய் மீது சரமாாி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தி துப்பாக்கியை பறித்தவா் கைது..! துப்பாக்கி மீட்பு..

ஆசிரியர் - Editor I
இராணுவ சிப்பாய் மீது சரமாாி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தி துப்பாக்கியை பறித்தவா் கைது..! துப்பாக்கி மீட்பு..

இராணுவ சிப்பாய் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தி துப்பாக்கியை பறித்து சென்றவா் துப்பா க்கியுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

இராணுவத்திலிருந்து இடைவிலகிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.

வவுனியா போகஸ்வேவா இராணுவ முகாமில் கடமையில் இருந்த சிப்பாய் ஒருவரைத் தாக்கிய கும்பல் அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சிப்பாயிடம் அபகரித்துச் செல்லப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு