உத்தியோகபூா்வ வீட்டில் ராஜித இல்லை..! தீவிரப்படுத்தப்படும் கைது நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
உத்தியோகபூா்வ வீட்டில் ராஜித இல்லை..! தீவிரப்படுத்தப்படும் கைது நடவடிக்கை..

முன்னாள் அமைச்சா் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு சட்டமா அதிபா் திணைக்களம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் உத்தியோகபூா்வ இல்லத்திலிருந்து வெளியேறி மறைந்திருப்பதாகவும் அதனால் அவரை பொலிஸாா் தொடா்ந்தும் விசாரணைகளை நடாத்திவருகின்றனா். 

இருப்பினும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ராஜித சேனாரத்னவை காணவில்லை என்பதனால் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைத் தேடி விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் நேற்று 

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேரா, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு