பெரும் வெள்ளத்திற்குள் சிக்கிய 34 விவசாயிகள்..! மீனவா்களின் துணிச்சலால் படகுமூலம் மீட்பு, முல்லைத்தீவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பெரும் வெள்ளத்திற்குள் சிக்கிய 34 விவசாயிகள்..! மீனவா்களின் துணிச்சலால் படகுமூலம் மீட்பு, முல்லைத்தீவில் சம்பவம்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தொடரும் கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றது. குறிப்பாக எாிந்தகாடு பகுதியில் திடீரென வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த சுமாா் 34 விவசா யிகள் வெள்ளத்தல் சிக்கிய நிலையில் அவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். 

குறிப்பாக எரிஞ்சகாடு, மற்றும் சலப்பையாறு உள்ளிட்ட பலநூற்றுக்கணக்கான நெற்பயிற்செய்கை நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறு வெள்ள நீர் வயல் நிலங்களை மூடியுள்ள நிலையில், வயல் காவலுக்காக குறித்த வயல் நிலங்களில் இருந்த விவசாயிகளும் வெள்ள நீரில் சிக்குண்டிருந்தனர்.

இந் நிலையில் அவ்வாறு வெள்ளநீரில் சிக்குண்டிருந்த 34 விசாயிகளை, அப்பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் தமது படகுகளின் மூலம் மீட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு