மிதமிஞ்சிய வேகம்..! 6 சிறுவனை மோதிய பேருந்து, சிறுவன் பலி, பேருந்தை எரிக்க முயன்ற மக்களால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
மிதமிஞ்சிய வேகம்..! 6 சிறுவனை மோதிய பேருந்து, சிறுவன் பலி, பேருந்தை எரிக்க முயன்ற மக்களால் பதற்றம்..

வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதி ஓரத்தில் நின்ற சிறுவனை மோதி தள்ளியதில் 6 வயதான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

நுவரெலியாவிலிருந்து லபுக்கலையை நோக்கி அதிவேகத்தில் பயணித்த பஸ் மோதியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது. சிறுவன் பேருந்தை நிறுத்தி பாதையை மாற நினைத்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து 

வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் சாரதியும் நடத்துனரும் தப்பித்து சென்றுள்ளதாக சம்பவமிடத்திலிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து சம்பவமிடத்திற்கு சென்று குறித்த பேருந்தை மக்கள் எரிக்க முட்பட்ட போது நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் பிரச்சனையை சுமூகப்படுத்தியுள்ளார். 

இதையடுத்து குறித்த சிறுனின் உடல் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதோடு மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் 

முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு