யாழ்.மாவட்டத்தில் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லை..! போருக்கு பின்னான 10 வருடங்களாக தொடரும் அவலம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லை..! போருக்கு பின்னான 10 வருடங்களாக தொடரும் அவலம்..

யாழ்.மாவட்டத்தில் சுமார் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லாத நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சமூக நலனோம்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மூலம் 

வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய புள்ளிவிவரத்தின்படி 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு இல்லை.

அதிலும் குறிப்பாக தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளன. 

ஏனெனில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசம் என்பதால் அதிகளவில் வீடுகள் தேவைப்படுகின்றன என யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் சட்டத்தரணி 

எஸ். முரளிதரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் முன்னேற்பாட்டு குழுக் கூட்டம் 

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இ தன்போதே இந்தக் தகவலை மேலதிக அரச அதிபர் தெரிவித்தார். வீட்டுத்திட்டத்திற்கு காணாமற்போனவர்களின் குடும்பங்கள்,

இடம்பெயர்ந்தோர் மற்றும் முன்னாள் போராளிகள் என பலரும் விண்ணப்பித்துள்ளார்கள். அதில் ஆயிரத்து 400 முன்னாள் போராளிகளுக்கு இன்றுவரை வீடுகள் 

வழங்கப்பட்டுள்ளன என்றும் மேலதிக அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு