வளவுக்குள் வந்த கன்று குட்டியை கல்லால் குத்தி கொலை செய்த ஜந்தறிவு இளைஞன்..! வட்டுக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வளவுக்குள் வந்த கன்று குட்டியை கல்லால் குத்தி கொலை செய்த ஜந்தறிவு இளைஞன்..! வட்டுக்கோட்டையில் சம்பவம்..

தன்னுடைய வீட்டு வளவுக்குள் அயல்வீட்டு கன்று குட்டி வந்ததால் கோபமடைந்த இளைஞன் கன்று குட்டியை கல்லால் அடித்து கொன்றுள்ளான்.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு கோட்டைக்காடு பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சுமார் 30 நாள்களே நிரம்பிய கன்றுக்குட்டி துள்ளித்திருந்து  வேலியில் இருந்த இடைவெளியால் அயல் வீட்டு வளவுக்குள் சென்றுள்ளது. 

அதனைக் கண்ட அயல் வீட்டு இளைஞன் (வயது -19) கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.  

மிருகவதைச் சட்டத்தின் கீழ் அந்த இளைஞன் மீது நீதிமன்ற நடவடிக்கை கோரி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

எனினும் பொலிஸார் இதுதொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கன்றுக்குட்டியின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு