விகாரைக்குள் நுழைந்து விகாராதிபதி மீது தாக்குதல்..! 3 ரவுடிகள் கைது..

ஆசிரியர் - Editor I
விகாரைக்குள் நுழைந்து விகாராதிபதி மீது தாக்குதல்..! 3 ரவுடிகள் கைது..

பௌத்த விகாரைக்குள் நுழைந்து பௌத்த பிக்கு மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 போ் நேற்றய தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள எல்லைக் கிராமமான ஓமாடியாமடு சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் விகாராதிபதியான 

சுபத்தாலங்காரம கிமி சம்பவதினமான நேற்றுமுந்தினம் வெள்ளிக்கிழமை (20) இரவு விகாரையில் இருந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் 

மதுபோதையில் விகாரைக்குள் புக முற்பட்டபோது அவர்களுடன் ஏற்பட்ட வாய்தர்க்கதின் போது விகாரதிபதி மீது குறித்த குழுவின் பொல்லால் தாக்குதல் நடத்திவிட்டு 

அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் இதனையடுத்து இத் தாக்குதலில் படுகாயமடைந்த விகாராதிபதியை 

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது இதனையடுத்து இந்த தாக்குதலை மேற்கொண்ட 

3 பேரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு