அதிகாலை 1 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த முதலை..! பதறியடித்து ஓடிய குடும்பம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலை 1 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த முதலை..! பதறியடித்து ஓடிய குடும்பம்..

வீட்டுக்குள் முதலை நுழைவதை பாா்த்து பதறியடித்து வீட்டிலிருந்தவாகள் ஓடிய நிலையில், பொ துமக்கள் இணைந்து முதலையை மீட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனா். 

இந்த சம்பவம் வவுனியா நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடா்பில் மேலும் தொியவருவதாவது, 

இன்று அதிகாலை ஒரு மணியளவில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் முதலை ஒன்று நுழைவதை அவ்வீட்டார் அவதானித்துள்ளனர்.

வீட்டிலிருந்தவா்கள் அலறியடித்து ஓடியுள்ளனா். அதனையடுத்து அயலவர்களின் துணையுடன் குறித்த முதலையினை பிடித்துள்ளனர். 

மேலும் இது தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டு முதலையினை மீட்கும் நடவடிக்கையில் 

வனஜீவராசி திணைக்களம் ஈடுபட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக முதலைகள் 

குடியிருப்பு பகுதிகளிற்குள் வருகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகிறது.‌ இதேவேளை பிடிபட்ட முதலையானது ஆறு அடி நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு