தொடரும் கனமழை மற்றும் வெள்ளம்..! கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் முற்றாக நிறுத்தம்..

ஆசிரியர் - Editor I
தொடரும் கனமழை மற்றும் வெள்ளம்..! கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் முற்றாக நிறுத்தம்..

கிழக்கு மாகாணத்தில் மழையுடன் கூடிய காலநிலை தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில், கி ழக்கு மாகாணத்திற்கான 3 ரயில் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப் பட்டிருக்கின்றது. 

இதனடிப்படையில் மட்டகளப்பிலிருந்து இன்று மாலை 4.45க்கு புறப்படவிருந்த தொடரூந்தும் இரவு 8.15க்கு புறப்படவிருந்த கடுகதி தொடரூந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மட்டகளப்பிலிருந்து 

மாகோ உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கான சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.சில பகுதிகளில் தொடரூந்து பாதையில் மண்சரிவு 

ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை மட்டகளப்பு மாவட்டத்ததில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டகளப்பு மாவட்ட 

அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு