சஜித் பிறேமதாஸவுக்கு ஆதரவாக தோ்தல் பிரச்சாரம் செய்த இளைஞன் மீது ரவுடிகள் தாக்குதல்..! கனகராயன் குளத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சஜித் பிறேமதாஸவுக்கு ஆதரவாக தோ்தல் பிரச்சாரம் செய்த இளைஞன் மீது ரவுடிகள் தாக்குதல்..! கனகராயன் குளத்தில் சம்பவம்..

கனகராயன் குளம் பகுதியில் சஜித் பிறேமதாஸவுக்காக தோ்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுப ட்டிருந்த இளைஞன் ஒருவா் மீது ரவுடி கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. 

பூந்தோட்டம் பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த இந்திரலிங்கம் தீபன் (37-வயது) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சி.சி.ரி.வி. கமரா பொருத்தும் பணியினை மேற்கொள்வதற்காக கனகராஜன்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீடு ஒன்றிற்கு சென்றபோது, 

குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உட்பிரவேசித்த கட்சியொன்றின் ஆதரவாளர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸாரின் வாக்குமூலத்தில் இளைஞன் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஊடக செயற்பாடுகள் தேர்தல் அறிக்கையிடல் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

இதன்போது இளைஞனுக்கும் தாக்கிய கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையேயும் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கனகராஜன்குளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு