போதையில் விகாரைக்குள் நுழைந்து ரவுடிகள் பௌத்த பிக்கு மீது சரமாாி தாக்குதல்..! பிக்கு வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
போதையில் விகாரைக்குள் நுழைந்து ரவுடிகள் பௌத்த பிக்கு மீது சரமாாி தாக்குதல்..! பிக்கு வைத்தியசாலையில்..

மட்டக்களப்பு ஓமாடியாமடு பகுதியில் பௌத்த பிக்கு ஒருவா் மீது 3 போ் கொண்ட குழு சரமாாி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தாக்குதலுக்கு இலக்கான பௌத்த பிக்கு வைத்தியசாலையி ல் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் பௌத்த மதகுருவான சுபத்தாலங்காரம கிமி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதா வது, குறித்த மூன்று இளைஞர்கள் நேற்று இரவு மது அருந்திவிட்டு 

விகாரைக்குள் பிரவேசித்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியமையாலேயே குறித்த மதகுரு மீது பொல்லால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த மதகுரு நடமாட முடியாத நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மதகுரவை மீட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு