கக்கூஸ் விவகாரம் மாநகரசபை ஊழியா்கள் மீது வா்த்தகா்கள் தாக்குதல்..! புறக்கணிப்பு போராட்டம், நோில் பாா்த்தாா் டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I
கக்கூஸ் விவகாரம் மாநகரசபை ஊழியா்கள் மீது வா்த்தகா்கள் தாக்குதல்..! புறக்கணிப்பு போராட்டம், நோில் பாா்த்தாா் டக்ளஸ்..

யாழ்.மாநகரசபை சுகாதார தொழிலாளிகள் இருவா் மீது வா்த்தகா்கள் தாக்குதல் நடத்திய சம்ப வம் தொடா்பில் குற்றவாளிகளை கைது செய்யக்கோாி மாநகர சுகாதார தொழிலாளிகள் இன்று காலை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனா். 

யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் அறவிடப்படுகிறது.மலசல கூடத்தை பயன்படுத்திய நகர பழக்கடை வியாபாரி நேற்றைய தினம் தான் இரண்டாவது தடவை 

பயன்படுத்துவதால் கட்டணம் செலுத்த முடியாது என்று மாநகர ஊழியருடன் தர்க்கத்தில் ஈடுப்பட்டதுடன், அவரைத் தாக்கியும் உள்ளார். அதனையடுத்து சக ஊழியர் ஒருவர் நியாயம் கேட்கச் சென்ற போது மற்றொரு வியாபாரி அவரைத் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரத் தொழிலாளிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து 

இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தம் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் யாராலும் எடுக்கப்படவில்லை என சுகாதாரத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

சம்பவத்தை அறிந்த கடற்றொழில் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகருக்கு வந்து ஆராய்ந்த பின்னர், தாக்குதல் நடத்திய வியாபாரிகளை கைது செய்யுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு