குளத்தில் மீன்பிடிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்பு..! வவுனியாவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
குளத்தில் மீன்பிடிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்பு..! வவுனியாவில் சம்பவம்..

குளத்தில் மீன்பிடிக்க சென்ற 57 வயதான முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வவுனியா- உளுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஜி.விஜயசிறி என்பவரே உயிரிழந்திருக்கின்றார். 

இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீன் பிடிப்பதற்கு சென்ற விஜயசிறி என்பவர் நீண்டநேரமாக வீடு திரும்பவில்லை. இந் நிலையில் ஊர்மக்கள் தேடிச் சென்றபோது உளுக்குளம் குளத்தினுள் மிதந்த நிலையில் சடலம் காணப்பட்டதை தொடர்ந்து 

உளுக்குளம் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை சடலம் மரண பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு