மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு இனி வரிசையில் நிற்கவேண்டாம்..! அதிரடி நடவடிக்கை, களத்தில் இறங்கினார் அங்கஜன்..

ஆசிரியர் - Editor I
மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு இனி வரிசையில் நிற்கவேண்டாம்..! அதிரடி நடவடிக்கை, களத்தில் இறங்கினார் அங்கஜன்..

யாழ்.மாவட்டத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கை பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் துரித ந டவடிக்கை எடுத்திருக்கின்றார். 

மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு இன்று காலை விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்ததுடன், மருத்துவ சான்றிதழ் வழங்குவதை சுலபமாக்குவதற்கான நடவடிக்கைகைளை ஆராய்ந்தார். 

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுவரை காலமும் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு பலர் பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருந் தனர். அது குறித்து எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் 

இன்று காலை மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளேன். நாமும் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மாலை மருத்துவ சான்றிதழ் வழங்கும் பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். 

இந்த நடவடிக்கையினை மருத்துவ சத்தியமூர்த்தி போன்ற அதிகாரிகள் உள்ளடங்கிய குழு மேற்கொள்ளவுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ சான்றிதழ் பெறுபவர்கள் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. தேவையான விண்ணப்ப படிவங்களை பெறலாம், 

அதற்கு திகதி கொடுக்கப்படும் அந்த திகதியில் வந்து மருத்துவ சான்றிதழை பெறலாம். மேலும் மருத்துவர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதன் மூலம் நடைமுறை இலகுவாக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு