மன்னார் கடலில் ஈரான் நாட்டவர் கைது..! கடற்படையின் திடீர் சோதனையில் சிக்கினார். ஏன்..? எதற்காக..? விசாரணை தீவிரம்..

ஆசிரியர் - Editor I
மன்னார் கடலில் ஈரான் நாட்டவர் கைது..! கடற்படையின் திடீர் சோதனையில் சிக்கினார். ஏன்..? எதற்காக..? விசாரணை தீவிரம்..

மன்னார்- சிலாவத்துறை கடலில் பயணித்த படகை கடற்படையினர் வழிமறித்து சோதனை யிட்டபோது ஈரான் நாட்டவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்றை சோதனை செய்தனர்.

படகில் ஈரான் பிரஜை இருப்பது தெரியவந்ததை அடுத்து அவருடன் இருந்த மன்னாரைச் சேர்ந்த இரண்டு இலங்கையர்களுக்கு கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு