அடுத்த ஆப்பு ஹிஷ்புல்லாவுக்கு..! நிதி குற்றப்பிரிவிடம் அத்துரலிய ரத்ன தேரர் சரமாரி கேள்வி..

ஆசிரியர் - Editor I
அடுத்த ஆப்பு ஹிஷ்புல்லாவுக்கு..! நிதி குற்றப்பிரிவிடம் அத்துரலிய ரத்ன தேரர் சரமாரி கேள்வி..

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஷ்புல்லாவின் ஷர்யா பல்கலைகழகம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஹிஷ்புல்லா மீது எடுத்த நடவடிக்கை என்ன?

மேற்படி விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நிதி குற்றவியல் பொலிஸ் பிரிவுக்கு நாடா ளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை சென்றுள்ளார். 

மட்டக்களப்பு சர்யா பல்கலைக்கழக நிர்மாண விவகாரத்தில் அவர் இதற்கு முன்னர் FCID என்ற பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு பதிவுசெய்திருந்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இந்த முறைப்பாட்டின் தற்போதைய விசாரணைத் தரம் பற்றி கேட்டறிவதற்காகவே 

ரத்தன தேரர் இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு