ஆளுநர் நியமனம் மட்டுமல்ல பல விடயங்களில் விழி பிதுங்கியே நிற்கிறார்..! ஜனாதிபதி கோட்டாவை நகைத்த சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
ஆளுநர் நியமனம் மட்டுமல்ல பல விடயங்களில் விழி பிதுங்கியே நிற்கிறார்..! ஜனாதிபதி கோட்டாவை நகைத்த சுமந்திரன்..

வடமாகாண ஆளுநர் நியமனத்தில் மட்டுமல்ல பல விடயங்களில் ஜனாதிபதி கோட்டா விழி பிதுங்கியே நிற்கிறார். என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பு எந்த பரிந்துரையும் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வடமாகாண நிர்வாகங்கள் சரியான முறையில் நடைபெற முடியாது  முன்னேற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. 

ஆளுநர் நியமனம் உடனடியாக செய்யப்பட வேண்டும். முதலில் அவர் ஆளுநர் ஒருவரை நியமிக்கட்டும் என அவர் தெரிவித்தார். அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் , கூட்டமைப்பு ஒருவரை பரிந்துரை செய்ததாகவும் 

அதனை பிரதமர் ஏற்றுக்கொண்ட போதும் , ஜனாதிபதி அவரை ஏற்றுக்கொள்ளாது அவரை நியமிக்க முடியாது எனவும் கூறியதாக இணையங்களில் வெளி வந்த செய்திகள் தொடர்பில் கேட்டகப்பட்ட போது, 

இணையங்களில் வரும் செய்திகள் தொண்ணூறு வீதமானவை பொய்யானவை. ஆனால் இந்த செய்தி நூற்றுக்கு நூறு வீதமும் பொய்யானது. அதில் எந்த விதமான உண்மையும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு