பெண்ணொருவர் செலுத்திவந்த காருடன் மோதி விபத்து: இளைஞன் காயம்

ஆசிரியர் - Admin
பெண்ணொருவர் செலுத்திவந்த காருடன் மோதி விபத்து: இளைஞன் காயம்

யாழ். ஊரெழு பர்வதவர்த்தனி அம்பாள் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று இரவு(16) இடம்பெற்றுள்ளது. 

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

யாழ். புன்னாலைக்கட்டுவனிலுள்ள தனது உறவினர் வீடொன்றுக்குச் சென்றுவிட்டு உரும்பிராய் நோக்கி குறித்த இளைஞன் மோட்டார்ச் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்நிலையில் மேற்படி பகுதியில் அதேபக்கமாகச் சென்று கொண்டிருந்த உழவியந்திரத்தை குறித்த இளைஞர் வேகமாக முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். 

அப்போது எதிர்த்திசையிலிருந்து பெண்ணொருவர் செலுத்தி வந்த காருடன் மோதுண்டு குறித்த இளைஞன் விபத்துக்குள்ளானார். சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞனின் கை மற்றும் கால்களில் சிறு காயங்கள்  ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மோட்டார்ச் சைக்கிளும், காரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன. 

இதேவேளை, மேற்படி இளைஞனின் கவனயீனமான செயற்பாடே விபத்துக்கு காரணமென சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு