யாழ்.சுதுமலையில் தாக்குதல், பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடிய ஆவா குழு ரவுடிகள் இருவர் கைது..! மேலும் 4 ரவுடிகளுக்கு வலைவீச்சு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுதுமலையில் தாக்குதல், பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடிய ஆவா குழு ரவுடிகள் இருவர் கைது..! மேலும் 4 ரவுடிகளுக்கு வலைவீச்சு..

யாழ்.சுதுமலை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் பொலிஸாரின் சுற்றிவளைப்பிலிருந்த தப்பி ஓடிய ஆவா குழுவின் முக்கிய இரு ரவுடிகளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலும் 4 ரவுடிகளை தேடி வருகின்றனர். 

மானிப்பாய், கட்டுடை பகுதிகளை சேர்ந்த ரவுடிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின் றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுதுமலை பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியபோது, பொலிஸாரின் சுற்றிவளைப்பிலிருந்து 

6 ரவுடிகள் தப்பி ஓடியிருந்தனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டை கொண்டு மோட்டார் சைக்கிள்  உரிமையாளரான நவாலியைச் சேர்ந்தவரை அன்றைய தினம் மாலை கைது செய்தனர். 

எனினும் தனது மோட்டார் சைக்கிளை கும்பல் பறித்துச் சென்றது என்று அந்த நபர் தெரிவித்திருந்தார். மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கைது செய்யப்பட்டதும் அன்றைய தினம் சம்பவம் நடந்த அன்று  இரவு 

அவருடைய வீட்டுக்குள் புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்திருந்தது. இரண்டு வன்முறைகளையும் ஒரே கும்பலைச் சேர்ந்தோரே செய்தனர் என்று விசாரணைகளில் பின்னர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கட்டுடையைச் சேர்ந்த ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

 சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்கப்படும் நிலையில் மேலும் நால்வரைத் தேடி பொலிஸார் விசாரரணகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு