அாிசி, தேங்காய், மரக்கறி உள்ளிட்ட அதியாவசிய பொருட்களின் விலை அதிகாிப்பு..!

ஆசிரியர் - Editor I
அாிசி, தேங்காய், மரக்கறி உள்ளிட்ட அதியாவசிய பொருட்களின் விலை அதிகாிப்பு..!

இலங்கையில் அாிசி, தேங்காய், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகாித்தி ருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது. 

ஒரு கிலோ அரிசியின் விலை 100 ரூபாவை கடந்துள்ளதுடன் தேங்காய் ஒன்றின் விலை 50 - 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது.

மலையகத்தில் மரக்கறி விலை நூற்றுக்கு 60 வீதம் அதிகரித்துள்ளதுடன், ஏனைய பகுதிகளில் மரக்கறி விலையும் உயர்வடைந்துள்ளது.

சின்ன வெங்காயம் ஒரு கிலோ 500 ரூபாவை கடந்துள்ள நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாயை கடந்துள்ளது.

பண்டிகைக் காலம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக சடுதியாக விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு