பள்ளிக்குடாவில் கடற்படையின் சுற்றிவளைப்பு ரோந்து நடவடிக்கை..! சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது..

ஆசிரியர் - Editor I
பள்ளிக்குடாவில் கடற்படையின் சுற்றிவளைப்பு ரோந்து நடவடிக்கை..! சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது..

பூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடற்படையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை யின்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவரிடமிருந்து 6 கிலோ ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோதமான முறையில் கடல் உயிரினங்களை பிடிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை யும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையிலேயே பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவகச்சேரியை அண்டிய பள்ளிக்குடா கடற்கரை பகுதியில் 6 கிலோ கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குடா கடற்கரை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை அவதானித்த கடற்படையின் கரையோர பாதுகாப்பு பிரிவினர் அதில் ஒன்றினை தொடர்ந்து சென்றபோது அவரிடமிருந்து 6 கிலோ கடலாமை இறைச்சி கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு