பட்டம் விட்டு விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..! பருத்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பட்டம் விட்டு விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..! பருத்துறையில் சம்பவம்..

பருத்துறை- இன்பருட்டி பகுதியில் பட்டம் விட்டு விளையாடி கொண்டிருந்த 17 வயதான சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜசன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சில மணி நேரத்தின் பின்பே அவரை கிணற்றிலிருந்து மீட்ட உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு