சுதுமலையல் பதற்றம்..! வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ஆவா குழு ரவுடிகளை சுற்றிவளைத்த பொலிஸார்.. ரவுடிகள் தப்பி ஓட்டம், பொலிஸ் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
சுதுமலையல் பதற்றம்..! வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ஆவா குழு ரவுடிகளை சுற்றிவளைத்த பொலிஸார்.. ரவுடிகள் தப்பி ஓட்டம், பொலிஸ் குவிப்பு..

யாழ்.மானிப்பாய்- சுதுமலை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிடு சென்ற ஆவா குழு ரவுடிகளை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில், வாள்கள், மோட்டார் சைக்கிள்களை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். 

இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் சுதுமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அப்பகு தியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆவா குழு ரவுடிகள் வாள்களை காட்டி வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தாக்குதல் நடாத்தியிருப்பதுடன், 

வீட்டிலிருந்த பொருட்கள், கதவுகள், யன்னல்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இத னையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற சமயம் வீதியால் சென்றவர்களையும் வாளா ல் வெட்டுவதற்கு முயற்சித்துள்ளனர். இதன்போது அப்பகுதியால் 

வந்த பொலிஸார் சம்பவத்தை அவதானித்து உடனடியாக மேலதிக பொலிஸாரை அழைத்து சுற்றிவளைத்தனர். இதனையடுத்து ரவடிகள் வாள்கள், மோட்டார் சைக்கிள்களை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இந்நிலையில் இலக்க தகடுகள் மறைக்கப்பட்ட இரு புதிய மோட்டார் சைக்கிள்கள், வாள் போன்றவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய ரவுடிகளை தேடி பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையிலும் களமிறங்கியுள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு