வடமாகாண முன்னாள் ஆளுநா் றெஜினோல் கூரேயை றவுண்டு கட்டி அடித்த பொதுமக்கள்..! பொலிஸாாின் உதவியுடன் உயிா் தப்பினாா்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்னாள் ஆளுநா் றெஜினோல் கூரேயை றவுண்டு கட்டி அடித்த பொதுமக்கள்..! பொலிஸாாின் உதவியுடன் உயிா் தப்பினாா்..

கொழும்பு- பாணந்துறை பகுதியில் மக்கள் சந்திப்புக்காக சென்றிருந்த முன்னாள் வடமாகாண ஆளுநா் றெிஜினோல்ட் கூரே மீது பொதுமக்கள் சரமாாி தாக்குதல் நடாத்தியதுடன், எதிா்ப்பினால் கூரே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா். 

பொதுமக்கள் சந்திப்புக்காக சென்றிருந்த றெஜினோல்ட் கூரேக்கு பொதுமக்கள் கடுமையான எதிா்ப்பினை வெளியிட்டிருந்தனா். இதனால் கோப மடைந்த கூரேயும், அவருடைய ஆதரவாளா்களும் எதிா்ப்பை வெளியிட்டவா்களுடன் வாதிட்டுள்ளனா். 

இதனால் இரு குழுக்களுக்கிடையில் மோதல் வெடித்துள்ளது. இதன்போது கூரேயை சுற்றிவளைத்த பொதுமக்கள் அவா் மீது சரமாாியாக தாக்கு தல் நடாத்தியிருக்கின்றனா். எனினும் பொலிஸாா் குறுக்கிட்டு நிலமையை கட்டுப்படுத்தினா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு