தொடரும் கனமழை..! நாடு முழுவதும் 14164 போ் பாதிப்பு..! வெள்ளக்காடாக மாறிய 4 மாவட்டங்கள்..

இலங்கையில் தொடரும் கனமழையினால் சுமாா் 4153 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 946 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 149 பேர் 29 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் 5 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்க கூடும் என
வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.