புகைரதத்துடன் மோதி 72 வயதான முதியவா் பலி..!

ஆசிரியர் - Editor I
புகைரதத்துடன் மோதி 72 வயதான முதியவா் பலி..!

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பயணித்த ரயிலுடன் மோதி வயோதிபா் ஒருவா் பலியாகியுள்ளாா். 

நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த வயோதிபர் அநாதையான நிலையில் தனிமையாக வாழ்ந்து வருவதாகவும், 

வழமையாக மது அருந்தி வருவதாகவும் நேற்று ரயில் வந்து கொண்டிருந்தபோது மதுபோதையில் ரயிலுடன் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிப்பொத்தானை 4ஆம் வாய்க்கால் திஸ்ஸபுர பகுதியில் வசித்து வரும் தர்மதாஷா (72 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு