கெடுபிடிகளுக்கு மத்தியில் தீருவில் திடலில் மாவீரர் நாள்!

ஆசிரியர் - Admin
கெடுபிடிகளுக்கு மத்தியில் தீருவில் திடலில் மாவீரர் நாள்!

வடமராட்சி – வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக தீபம் ஏற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இன்று மாலை 6.05 மணிக்குக் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்போது மாவீரர்கள் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாக்காலியில் வந்து பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.

தீருவில் திடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டனர். அங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சிவில் உடையில் நின்ற புலனாய்வாளர்களால் ஒளிப்படம் எடுக்கப்பட்டனர். எனினும் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உறவுகள் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு