இறுதி யுத்தத்தில் தீரமுடன் போராடி மாவீரர்களை நினைவுகூர தயாராகும் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விரைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி இந்தச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
சிறிலங்காவின் ஜனாதிபதியாக போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், அவரால் நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் தீரமுடன் போராடி வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் உட்பட அனைத்து மாவீரர்களும் இந்த மாவீரர் தினத்தின்போது நினைவு கூறப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.