கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த பேராசிரியர் நாட்டை விட்டு ஓட்டம்!

ஆசிரியர் - Admin
கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த பேராசிரியர் நாட்டை விட்டு ஓட்டம்!

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி வழக்கு தாக்கல் செய்திருந்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர் வெளிநாட்டிற்கு செல்லும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு