கடந்த 5 நாட்களாக காணாமல்போயிருந்த பெண் பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு..! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
கடந்த 5 நாட்களாக காணாமல்போயிருந்த பெண் பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு..! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்.

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த நிலையில் தேடப்பட்டுவந்த குடும்ப பெண் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மையாக நவீன சந்தை கட்டடத்து அருகாமையில் (இந்து வாலிபர் சங்க புத்தகசாலைக்கு பின்புறம்) உள்ள பாழடைந்த கிணற்றில் அவரது சடலம் காணப்படுகிறது.

சங்கரத்தை, திருஞான சம்பந்தா வீதியைச் சேர்ந்த யசோத என்று ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.குடும்பப் பெண் கடந்த திங்கட்கிழமை (நவ.11) தொடக்கம் காணாமற்போனார் என்று 

அவரது மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு