யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு பணிகள் துரிதம்..! அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்குகளை அளித்தனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு பணிகள் துரிதம்..! அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்குகளை அளித்தனர்..

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு பணிகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில் யாழ்.குடாநாட்டில் முக்கிய அரசியல் தலைவர்கள் காலையிலேயே தமது வாக்குகளை தங்கள் பிரதேசங்களில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் அளித்துள்ளனர். 

யாழ்.குடாநாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈழமக்கள் ஜனநாய கட்சி தலைவர், சிறீலங்கா சுதந்திரகட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்,

 ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் விஜயகலா மகேஸ்வ ரன் ஆகியோரும் இன்று காலையே தமது வாக்குகளை அளித்துள்ளனர். இதேபோல் யாழ்.மாவட்டத்தில் துரிதகதியில் வாக்களிப்பு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. சகல வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று 

வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு