வடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று புதன்கிழமை (13) காலை 8.00 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். மருதனார்மடம், மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ். நுண்கலைப்பீடம், ரொட்டியாலடி, அம்பலவாணர் வீதி, பெரிய மதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, அல்லைப்பிட்டி, மண்கும்பான், வெண்புரவிநகர், உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர்மலை, பாரதிதாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், வல்வெட்டித்துறையின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு