1113 கிலோ பீடி இலைகளுடன் 2 கடத்தல்காரா்கள் கைது..! கிளிநொச்சி- இரணைதீவில் கடற்படை அதிரடி..

ஆசிரியர் - Editor I
1113 கிலோ பீடி இலைகளுடன் 2 கடத்தல்காரா்கள் கைது..! கிளிநொச்சி- இரணைதீவில் கடற்படை அதிரடி..

இந்தியாவிலிருந்து கிளிநொச்சி- இரணைதீவு கடற்பகுதி ஊடாக கடத்தப்பட்டுவந்த 1113 கிலோ பீடி இலைகளை கடற்படையினா் படகுடன் கைப்பற்றியுள்ளதுடன், இரு சந்தேகநபா்களை கைது செய்துள்ளனா். 

மேற்கண்டவாறு கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினட் கமான்டர் இசுறுசூரிய பண்டார தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மன்னார் பேசாளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர் 

பீடி இலைகள் 30 பொதிகளில் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு