ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவுக்காக யாழ்ப்பாணத்தில் களம் இறங்கினாா் சந்திாிக்கா..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவுக்காக யாழ்ப்பாணத்தில் களம் இறங்கினாா் சந்திாிக்கா..!

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந் திாிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்.மாவட்டத்திற்கு இன்று வருகைதந்து தோ்தல் பிரச்சார நடவடிக்கைளை மேற்கொண்டாா். 

அவருக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர். நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முண்ணணியின் வேட்பாளர் 

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கு மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவே சந்திரிகா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு 

மக்களின் பிரச்சனைகள் தேவைகள் குறித்து கேட்டு அறிந்ததுடன் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.இச் சந்திப்பில் மதகுருமார்கள், பொது மக்கள் ஆதரவாளர்கள் 

எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு