மஹிந்தவும் ரணிலும் இப்போது நண்பா்கள்..! வரலாற்றில் சிறந்த மக்கள் தலைவனாக நான் எழுதப்படுவேன்..

ஆசிரியர் - Editor I
மஹிந்தவும் ரணிலும் இப்போது நண்பா்கள்..! வரலாற்றில் சிறந்த மக்கள் தலைவனாக நான் எழுதப்படுவேன்..

பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவும் எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்சவும் இப்போ து நல்ல நண்பா்கள். அரசியலில் நிரந்தர எதிாியும் இல்லை. நண்பனும் இல்லை. இது வே உண்மை என ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸ கூறியுள்ளாா். 

என்னுடன் யார் கைகோர்த்தாலும் எனது அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் 

இந்த கருத்துக்களை அவர் முன்வைத்தார்.இலங்கையின் எதிர்கால வரலாற்றில் இலங்கையில் மக்களுக்காக செயற்பட்ட இரவு பகல் பார்க்காது சேவை செய்த மக்கள் தலைவர் ஒருவராக சஜித் பிரேமதாச இருந்தார் என்று எழுத வேண்டும். 

அதற்காக நான் மக்களுக்காக சேவை செய்ய விரும்புவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு