யாழ்ப்பாணம் வருகிறாா் சந்திாிக்கா..! கோட்டாவுக்கு எதிராக தீவிர பரப்புரை ஆரம்பமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வருகிறாா் சந்திாிக்கா..! கோட்டாவுக்கு எதிராக தீவிர பரப்புரை ஆரம்பமாம்..

கோட்டாவுக்கு எதிரான பரப்புரைக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா நாளை காலை யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளாா். 

யாழ்ப்பாணத்திற்கு நீண்ட நாட்களின் பின்னர் செல்லும் சந்திரிக்கா யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் நாளை காலை 9 மணிக்கு 

காலந்துகொள்ளவுள்ளார். பின்னர் தெல்லிப்பழை,சங்கானை போன்ற இடங்களுக்கும் செல்லவுள்ளதுடன் அப்பகுதி மக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார், 

யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்புக்களை நிறைவு செய்து கொண்டு கிளிநொச்சிக்கு செல்லும் அவர் பளை இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெறும் 

மக்கள் சந்திப்பிலும் கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மண்டபத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு