கோட்டாவின் குரல்வளையை நொிக்கும் பௌத்த பிக்கு..! உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தாா்..

ஆசிரியர் - Editor I
கோட்டாவின் குரல்வளையை நொிக்கும் பௌத்த பிக்கு..! உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தாா்..

ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவின் அமொிக்க குடியுாிமை நீக்கப்ப ட்டமையினை உறுதிப்படுத்தக்கோாி கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரா் இன்று காலை சுதந்திர சதுக்கத்தில் உணவு தவிா்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளாா். 

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பாக 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை அவர் முன்னெடுத்துள்ளார்.

அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இதுவரை உள்ளடக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் 

இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்கப் பிரஜை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை கைவிட்டுள்ளதாக 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு